ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பதவியை நிராகரித்தது சவுதி - தமிழ் இலெமுரியா

21 October 2013 12:12 am

சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமை நிராகரித்துள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காக பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவுதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சவுதி அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள் என்ற விபரங்களை அந்நாடு வெளியிடவில்லை. சிரியா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசம் தவறியுள்ளதாக முன்னதாக சவுதி அரேபியா எச்சரித்திருந்தது. சிரியாவின் அதிபர் அஸ்ஸத்தை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களை சவுதி ஆதரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பினர்களுடன், சுழற்சி அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 உறுப்பு நாடுகளுமாக மொத்தமாக 15 நாடுகள் உள்ளன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி