11 November 2013 12:15 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் தலைமயிர்க் காணிக்கை மூலம் இந்த ஆண்டு வருவாய் 72 கோடி என அறியப்படுகின்றது. திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் எனினும் அதிகம் மயிர்க் காணிக்கை செலுத்துவோர் தமிழ்நாட்டு மக்களே ஆவர். உயிருக்கு இல்லையேனும், மயிருக்காவது மதிப்பு இருப்பதை எண்ணி ஆறுதல் அடையலாம். உலகிலேயே அதிக நீளமான முடி இந்தியப் பெண்களுக்கே உள்ளது என்பது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.