17 February 2015 4:41 pm
உலகின் அழகை உணரவும் நுகரவும்மனந்தான் வேண்டும்மதம் ஏன் வேண்டும்?மணக்கும் பூவில் முகங்கள் பதிக்கமதங்கள் தேவையில்லைவானில் சுடரும் மீனை அளக்கமதங்கள் தேவையில்லைவிடுதலை வானில் விரியும் சிறகில்..மதங்களின் குறிகளில்லைவீசும் காற்று மதங்கள் பார்த்துநம்மைத் தொடுவதில்லைகரைகளில் நின்று அலைகளை நோக்கவும்கவிதை வரியில் கடல்களைத் தேக்கவும்தரையில் புல்லின் பசுமையை அணைக்கவும்தூரிகை முனையில் திரும்ப நினைக்கவும்மனந்தான் வேண்டும்.மதம் ஏன் வேண்டும்?நரகல் கண்டால் மிதியாமல்நடக்கமதங்கள் தேவையில்லைநாறும் சகதியில் குளியாதிருக்கமதங்கள் தேவையில்லைமணக்கும் பூவில் முகங்கள் பதிக்கமதங்கள் தேவையில்லை…மனிதரை மனிதர் தோழமைகொள்ளமதங்கள் தேவையில்லைமனிதரைப் பிரித்துச் சுவர்களை வளர்க்கும்மதங்கள் தேவையில்லை…மனித உறவை மனிதர்க்கு மறுக்கும்மதங்கள் தேவையில்லை.- பாவலர் இன்குலாப்