31 May 2014 1:52 am
அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தும், இனப்பிரச்சினைக்கான தீர்வில் கூடுதல் பங்காற்றும்படி கோரியும் இந்தக் கடிதத்தை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் எழுதியுள்ளர். இந்தியாவில் புதிய அரசு அமைந்துள்ள சூழலிலும், தமிழகத்தில் ஜெயலலிதா பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதன் யதார்த்தத்தின் அடிப்படையில் இதைப் பார்க்க வேண்டும் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.