இலெமுரியா அறக்கட்டளை” சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் டாக்டர் ந.இராமசாமி ஐ.ஏ.எஸ். - தமிழ் இலெமுரியா

1 August 2016 12:06 pm

கவிஞர் அறிவுமதி பங்கேற்பு", இலெமுரியா அறக்கட்டளை" சார்பாக, சீர்வரிசை சண்முகராசனார் நினைவு இலக்கியச் சொற்பொழிவு, மாணவர் விருதுகள், நூல்கள் வெளியீடு என முப்பெரும் விழா மும்பை சயான், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நடைபெற்றது. முப்பெரும் விழா தொடக்கத்தில் "இலெமுரியா அறக்கட்டளை" நிறுவனரும் தலைவருமான சு.குமணராசன் வரவேற்புரையாற்றினார். மகாராட்டிரா மாநில பதிவுத்துறை பதிவாளாரும் முத்திரைத்தாள் ஆணையருமான டாக்டர் ந.இராமசாமி ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். விழாவில் பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் வி.தேவதாசன், ஆதிதிராவிடர் நலச்சங்கத் தலைவர் க.வ.அசோக்குமார், பொற்கோ அன்பழகன், நவிமும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ந.மகாதேவன், தமிழர் நலக் கூட்டமைப்பு அமைப்பாளர் கராத்தே முருகன், மும்பைத் தி.மு.க. செயலாளர் வே.ம.உத்தமன், மும்பை தமிழின இரயில் பயணிகள் சங்கப் பொருளாளர் க.நா.சாரங்கபாணி, கி.தனுஷ்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இலக்கியச் சொற்பொழிவுஇவ்விழாவிற்கு திரையிசைப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு ஆற்றினார்.மாணவர் விருதுகள்மறைந்த முதுபெரும் எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனார் நினைவாக, இவ்வாண்டுக்கான "திருவள்ளுவர் விருது" சயான், பீப்பிள் வெல்ஃபேர் உயர்நிலைப் பள்ளி மாணவி செல்வி பவானி குணாளனுக்கும், தந்தை பெரியார் விருது பாண்டூப், பிரைட் உயர்நிலைப் பள்ளி மாணவி செல்வி அ.சேசு சந்தியாவுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது மலாடு, நேல்மணி நகராட்சிப் பள்ளி மாணவி செல்வி நீலா கண்ணனுக்கும் விருதுகள், பொற்கிழிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப் பெற்றனர். மேலும் இவ்வாண்டில் மற்றுமொரு சிறப்பு விருதான "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் விருது" தாராவி, பி.எஸ்.ஐ.ஏ.எஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி செல்வி இலட்சுமி பிரியாவுக்கு வழங்கப் பெற்றது.மங்கத்ராம் பிரைவேட் லிமிடெட் நிருவாக இயக்குநர் சு.இராமச்சந்திரன், கவிஞர் புதிய மாதவி, சாய் இன்ஜினியரிங் ஓர்க்ஸ் உரிமையாளர் ந.சபேசன் ஆகியோர் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.நூல்கள் வெளியீடுமறைந்த புலவர் இரா.பே.பெருமாள் அவர்களின் "கனிச்சாறு", சு.குமணராசனின் "பனித்துளியின் நுனித்துளிகள்", உலகை மாற்றிய சொல்வெட்டுகள், கோரா-தராவின் "நடை உடை பாவனை" ஆகிய நூல்களை முறையே புலவர் பாலையா, தொழிலதிபர் ஆ.டென்சிங், கவிஞர் வதிலை பிரதாபன், மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட, இந்நூல்களின் முதல் படியினை தமிழர் நலக் கூட்டமைப்பு அமைப்பாளர் எஸ்.இராஜேந்திர சுவாமி, சாலமன், ஞான. அய்யாப்பிள்ளை, டி.கே.சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.மூத்த எழுத்தாளர் திருமதி சாரதா சீனிவாசன், கல்லூரி முதல்வர் திருமதி அமலா ஸ்டான்லி, மாநகராட்சி தமிழ் ஆசிரியர் குழுமத் தலைவர் திருமதி அனிதா டேவிட் ஆகியோர் நூல்களுக்கான அறிமுக உரையும் பாராட்டுரையும் வழங்கினர். சென்னை, சோகா இகேதா பெண்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் சேது குமணன், மும்பைத் திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா.கருண், இராஜா இளங்கோ, அ.கணேசன், ஆறுமுகப் பெருமாள், டாக்டர் பெருமாள், நெல்லை பைந்தமிழ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவ மணிகள், பெற்றோர்கள், பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.. "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி