கட்சிகளை ஒருங்கிணைத்து அரசை எதிர்த்துப் போராட தயார்: மகிந்த ராஜபக்சே அறிவிப்பு! - தமிழ் இலெமுரியா

16 October 2016 3:33 pm

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து தற்போதைய ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக போராட தான் தயார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.கூட்டு எதிர் கட்சியினர் இரத்தினபுரி நகரில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த இதனை தெரிவித்தார். ஆளும் அரசானது தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்சே, மிரட்டல்களின் மூலம் அரச விரோத குரல்களை முடக்க முயற்சித்து வருவதாக குற்றஞ் சாட்டினார்.எனவே, அரசாங்கத்திற்கு எதிராக சகல கட்சிகள் மற்றும் கூட்டணிகளை ஒன்று திரட்டி போராட தான் தயார் என்று அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தில் உள்ள பெரும் எண்ணிக்கையானோர் விரைவில் தன்னுடன் சேரவுள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்றத்தின் ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை விரைவில் மாறுவதற்கான அவகாசம் இருப்பதாகவும், அதற்காக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காத்திருக்கும் அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.மக்கள் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை விரைவில் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க தான் தயார் என்றும் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி