16 February 2017 5:06 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த அஇஅதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜன் பின்னர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நீதிபதி அஷ்வத் நாராயணாவின் நீதிமன்றத்தில் சசிகலாவும் அவரது மைத்துனி இளவரசியும் முதலில் சரணடைந்தனர்.அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்தான் சுகாதரன். அப்போது ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அண்ணன் மகனுமான வி.என்.சுதாகரன் சரணடையவில்லை. சற்றுத் தாமதாக பின்னர் அவரும் நீதிமன்றத்தில் சரண்டைந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மூவருக்கும் சாதாரண வகுப்பு சிறை வசதிகளே அளிக்கப்பட்டுள்ளனர்.